அப்பா
அப்பா என் அப்பா இறைவனடி சேர்ந்து இன்றுடன் 23 ஆண்டுகள் கழிந்துவிட்டன ....1931ம் வருடம் தாராபுரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் எனும் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். பள்ளிகல்வியை தாராபுரத்தில் முடித்துக்கொண்டு ,வேலைக்காகவும் ,நிரந்தரமாக தங்கவும் கோவைக்கு குடிபெயர்ந்தது குடும்பம். இளம் வயதிலேயே தாய் இறந்துவிட்டதால் ,தன்னுடன் பிறந்த தம்பி மற்றும் அப்பாவுடன் (என் தாத்தா )வாழ்ந்துவந்தார் .சீட்டு கம்பெனி குமாஸ்த்தா வேலையில் சிறிதுநாள் பணி செய்துவிட்டு ,பின்னர் ஒரு ஜவுளிக்கடையில் குமாஸ்தாவாக சொற்ப சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார் . என் தாத்தா நெசவு செய்து வந்த நிலையில் , தம்பி இடைநிலை ஆசிரியராக கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் பணிக்கு சேர்ந்தார் . அவரவர்க்கு உரிய வயதில் என் அப்பாவிற்கும் ,என் சித்தப்பாவிற்கும் திருமணமாகிய நிலையில் என் தாத்தா இயற்க்கை எய்தினார் . சிறு வயது முதலே என் மீதும், என் தம்பி மீதும் அதிக பாசம் வைத்திருந்தார் என் அப்பா .மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர் . ஒரு சில நண்பர்களை மட்டுமே கொண்டிருந்தார் .மனதில் உள்ள எதையும் வெளிகாட